மூக்கின் வழியாக கொரோனா தடுப்பு மருந்து: முதல் தவணையிலே நல்ல பலன்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மூக்கின் வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது மட்டுமல்லாமல், பரவுதையும் தடுக்கும் என சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

சயின்ஸ் அட்வான்சஸ் என்ற அமெரிக்க பத்திரிகையில் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையில் எலி போன்ற சிறிய வகை உயிரினங்களுக்கு கரோனா தடுப்பு மருந்தை மூக்கில் தெளிக்கும் முறை மிகவும் பாதுகாப்பானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜார்ஜியா பல்கலைக்கழக பேராசிரியர் பால் மெக்ரே, மூக்கின் வழியாக செலுத்தப்படும் இந்த புதிய வகை கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு நல்ல பலனை அளித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படும் எனவும், தற்போது உலக அளவில் நிலவும் துயரமான காலகட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை தடுப்பு மருந்தை முதல் தவணை எடுத்துக்கொண்டாலே போதுமான பலனைத் தரக்கூடியது. மேலும் இந்த வகை மருந்தை குறைந்தது 3 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும் என்றார்.

மேலும், கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் விடும் மூச்சுக்காற்று மூலம் மற்றவர்களுக்கும் பரவும். இந்த நிலையில் மூக்கின் வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்து, முழுமையாக பாதுகாப்பதோடு, மற்ற உயிரினங்களுக்கு பரவுவதையும் முற்றிலும் தடுக்கிறது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.