பரிசளிப்பு விழா

கோயம்புத்தூர் புரொடக்டிவிட்டி கவுன்சிலின் உற்பத்தித்திறன் வாரவிழாவின் இறுதி நாளான இன்று (17.02.18) பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், கோயம்புத்தூர் புரொடக்டிவிட்டி கவுன்சில் தலைவர் டாக்டர் ஏ.எம்.நடராஜன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கோயம்புத்தூர் புரொடக்டிவிட்டி கவுன்சில் கௌரவ செயலாளர் டாக்டர் எஸ்.சுதாகர் நன்றியுரை வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில், துணைத்தலைவர் கே.அருள், இணைச்செயலாளர் கே.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.