284 மில்லியன் பார்வையைக் கடந்த ‘எஞ்சாய் எஞ்சாமி’!

இந்திய சினிமா உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த பாடல் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல்தான். 3 என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் யு டியூபில் வெளியானது. வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே இப்பாடல் வைரலாகி, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனுஷ் பாடலாசிரியராகவும், பாடகராகவும் ஒரே பாட்டிலேயே உச்சம் தொட்டார் அப்பாடல் தான் தமிழ் சினிமா பாடல்களில் யு டியூபில் முதலிடத்தில் நீடித்து வந்தது.

பின்னர், தனுஷ் நடித்த மற்றொரு பாடலான ‘ரவுடி பேபி’ பாடல் அதை விடவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி கொல வெறி சாதனையை முறியடித்தது. தற்போது 1,183 மில்லியன் சாதனைகளுடன் அப்பாடல் தான் முதலிடத்தில் உள்ளது.

தற்போது இரண்டாம் இடத்தில் உள்ள கொல வெறி பாடலுக்கும் இப்போ போட்டி வந்துவிட்டது. தீ மற்றும் அறிவு பாடிய தனிப்பாடலான ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் யூ டியூபில் வெளியான நான்கு மாதங்களிலேயே 280 மில்லியன் பார்வை சாதனையைக் கடந்துள்ளது.

284 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள கொல வெறி பாடல் சாதனையை முறியடிக்க எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு இன்னும் 4 மில்லியன் பார்வைகள்தான் தேவைப்படுகிறது. அதையும் சீக்கிரத்திலேயே இப்பாடல் பெற்றுவிடும் என எதிர்பார்க்க படுகிறது.