ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

இக்கல்வியாண்டில் மூன்றாமாண்டில் பயின்ற கல்லூரி மாணவர்கள் பல்வேறு சமயங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்றனர். இதில் இருபதிற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கலந்துகொண்டு நேர்காணல் நடத்தினர். குறிப்பாக ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேசன் துறை சார்ந்த நிறுவனங்கள் எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு மற்றும் ஆளுமை தேர்வு ஆகிய பல சுற்று தேர்வுகளை நடத்தினர்.

இறுதியாக இந்நிறுவனங்கள் நடத்திய தேர்வுகளில் 205 மாணவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து தேர்வு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பணி நியமன  ஆணை பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் ஆர்.என்.உமா, துணை முதல்வர் டி.கோபாலகிருஷ்ணன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலர் பி.மோகன் குமார், துறைத் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.