தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ – கள்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு புதூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் மற்றும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேண்டுகோளை அடுத்து கோவை மாவட்டம் முழுவதும் முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு கொரானா தடுப்பு உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்களின் தொகுப்புகளை அதிமுகவினர் வழங்கினர்.

கொரானா இரண்டாம் அலை துவங்கிய நாள்முதல் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்து அன்றாட வாழ்க்கையில் சிரமப்பட்டு வரும் பொதுமக்களுக்கு வீடுவீடாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொருட்களின் தொகுப்புகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேண்டுகோளுக்கிணங்க கொடுக்கப்பட்டு வருவதாக சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் தெரிவித்தார்.