சென்னைக்கு அடித்தபடியாக கோவையில் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது – முதல்வர் ஸ்டாலின்

கோவையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள காரணத்தினால் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று கோவை வருகை புரிந்தார். இதன் ஒரு பகுதியாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

கிராம புற கண்காணிப்பு குழுகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனவும், கொடிசியா, வேளாண் பல்கலை, பாரதியார் பல்கலை உட்பட பல்வேறு இடங்களில் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தபட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், சீனிவாசா கல்யாண மண்டபம், கொடிசியாவில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது

கடந்த 10 ம் தேதி முதல் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதுவரை கோவையில் 585713 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதிய அரசு அமைந்த பின் 151061 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

கோவை உட்பட எல்லா இடங்களில் படுக்கை பற்றாகுறை இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கோவை புறக்கணிகப்பட்டதாக சிலர் சொல்கின்றனர், அவர்களுக்கு அரசியல் ரீதியாக பதில் அளிக்க விரும்பவில்லை. அவர்கள் இந்த அரசு ஏற்படுத்தியுள்ள உட்கட்ட அமைப்புகளை பார்வையிட வேண்டும் சென்னைக்கு அடித்தபடியாக கோவையில் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

கோவை புறக்கணிக்கப்படவில்லை என்றும், எல்லா ஊரும் எங்க ஊர்தான் அதில் எந்த பாரபட்சமும் கிடையாது. ஓட்டுபோட்ட மக்களுக்கு மட்டுமல்ல ஓட்டுப்போடாத மக்களுக்கும் சேர்ந்தே வேலைபார்க்கின்றோம். ஓட்டுப்போடாத மக்கள் வருத்தப்படும் வகையில் எங்கள் பணி இருக்கும். தமிழகத்தை பாதுகாப்பதுதான் எங்கள் முதல் வேலை. என கூறினார்.