நிர்மலா மாதா மெட்ரிகுலேசன் பள்ளியில் 25ம் ஆண்டு விழா

குனியமுத்தூர் நிர்மலா மாதா மெட்ரிகுலேசன் பள்ளியில் 25ம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன், ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் பால் அலபட் மற்றும் பலர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இவ்விழாவில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.