தொடங்கியது 3ம் ஆண்டு ஃஹேண்பால் டிராபி

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் “இந்துஸ்தான் விழிப்புணர்வு போட்டி” என்ற தலைப்பில் நடத்தப்படும்  கோவை மண்டல அளவிலான ஃஹேண்பால் போட்டி இன்று (31.01.18) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை சுஜித் குமார் ஐபிஎஸ் (டிராபிக்) துவக்கி வைத்தார். இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் தலைவர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் தமிழ்த்துறை தலைவர் திலிப்குமார் கலந்து கொண்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இப்போட்டி வருகின்ற 02.02.18ம் தேதி வரை நடைபெறவுள்ளது.