தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி

அண்ணல் மகாத்மா காந்தியின் 71வது நினைவு நாளையொட்டி இன்று (30.01.18) கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி, உதவி ஆணையர் நிர்வாகம் செந்தில்குமார் ரத்தினம், சொற்பொழிவாளர் திட்டங்கள் ரவிச்சந்திரன், மாமன்ற செயலாளர் ஆ.அமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.