கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் இன்று (06.05.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உக்கடம் இராமர் கோயில் வீதியில் செயல்பட்டுவரும் காய்கறி சில்லரை விற்பனை மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர் களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர், முஹமது கனிராவுத்தர் வீதி, ரங்கே கவுடர் வீதி, பெரிய கடை வீதி, தியாகி குமரன் மார்க்கெட், ராஜ வீதி, கருப்பகவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகைக்கடைகள், ஷாப்பிங் கடைகள், அரி சிக்கடைகள், பேக்கரிகள், மொத்த மற்றும் சில்லரை வியாபாரக்கடைகளின் உரிமையாளர்களிடம் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முகக் கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அப்பகுதியில் முகக் கவசம் அணியாமல் இருந்த 11 நபர்களுக்கு தலா ரூ.200ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500ம் விதிக்க உத்தரவிட்டார்.