தற்கால வங்கியாளர்கள், எதிர்கால வங்கியாளர்களுடன் கலந்துரையாடல்

கே.பி.ஆர்  கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக “தற்கால வங்கியாளர்கள், எதிர்கால வங்கியாளர்களுடன் கலந்துரையாடல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் (04/05/2021) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி உரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக, இந்தியன் வங்கி, கிளை மேலாளர், ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் வங்கியின் நடைமுறைகள் பற்றி விளக்கப்பட்டது. மேலும் வங்கி செயற்பாட்டில் உள்ள சிக்கல்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும்  வங்கிக்கணக்கு முறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக்கருத்தரங்கில் 40க்கும்மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.