ஓடிடியில் தொடர்ந்து வெளியாகும் பெரிய படங்கள்

கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து ஓடிடி தளங்களின் மீதி புதிய திரைப்படங்களின் பார்வை விழுந்துள்ளது.

ஏற்கனவே ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெங்குவின் போன்ற திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. இதனை தொடர்ந்து உச்ச நட்சத்திரமான தனுஷின் ஜகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இதுபோல் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இந்தநிலையில் சிவாவின் சுமோ படம் ஓடிடியில் வெளியாவது உறுதியாகி உள்ளது. இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோசிமின் இப்படத்தை இயக்கி உள்ளார்.

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமல்லமால் இது போன்ற பெரிய நடிகர்களின் படம் வெளியாவது ஓடிடியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனால் திரையரங்களுக்கு பெரும் வீழ்ச்சி எற்படும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.