இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல தடை 

இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியா மக்கள்  ஆஸ்திரேலியா சென்றால் 5 ஆண்டு சிறையும், கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து  வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இந்தியாவில் 4 லட்சம் மக்கள்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இந்தியாவில் இருந்து வெளியேற நினைக்கும் ஆஸ்திரேலிய மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா வருவதால் அவர்களை தனிமை படுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் இத்தகைய அறிவிப்பை  அந்நாடு வெளியிட்டுள்ளது.  மேலும் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வரும் பயணிகள் விமானத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.