டெல்லியில் தட்டுப்பாடாகும் ஆம்புலன்ஸ்

டெல்லியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அதிகளவில் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளதால் ஆம்புலன்சிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சத்பவனா  ஆம்புலன்ஸ் சேவையை சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில்:ஓட்டுநர்களில் 90% பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனாவுக்கு பயந்து ஓட்டுநர் பணிக்கு வர பலர் தயக்கம் காட்டுவதாக கூறினார்.

டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா  பாதிப்பு  மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல்  ஆக்ஸிஜன் குறைபாடு மற்றும்  படுக்கை இல்லாமல் பல நோயாளிகள் தவித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் உலகையே உலுக்கும் அளவிற்கு அங்கு கொரோனவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி அச்சத்தையும், தலைநகர்   டெல்லியின் நிலை பிற மாநிலங்களுக்கு ஒரு உதரணமாக அமையும் வண்ணம் இருந்தது.