கே.பி.ஆர்  பொறியியல் கல்லூரியில்  புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர்  பொறியியல் கல்லூரி மற்றும் மாயா அகாடமி  இணைந்து  கிராபிக் டிசைன் பட்டப்படிப்பிற்கான புரிந்துணர்வு  ஒப்பந்தத்தை இன்று (28.04.2021)செய்தது.

பல்கலைக்கழக மானியக்குழு கல்வி முறையில் புதிய மாற்றமாக  தொழில்முறை கல்விகளை ஊக்குவித்து வருகின்றது. இந்நிலையில் பொறியியல் கல்லூரியில் அனிமேட்டிக்ஸ் தொடர்பான புதிய கல்வி முறையை பயிற்சி அளிக்கும் விதமாக கே.பி.ஆர் கல்லூரியுடன், மாயா அகாடமி ஆப் அட்வான்ஸ்டு சினிமேட்டிக்ஸ்  மேக்குடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று  செய்யப்பட்டது.

இதற்கான விழாவில் பாராதியார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் காளிராஜ் கலந்து கொண்டு பேசுகையில்: தற்போது தொழில் முறை கல்விகளை கற்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும்,பட்டபடிப்பை முடிக்கும் மாணவர்கள் தொழில் சார்ந்து இருப்பதையே விரும்புவதாக கூறினார். பொறியியல் துறையில்,இன்றைய தலைமுறைக்கு அனிமேசன் மற்றும் கிராபிக்ஸ் டிசைன் படிப்புகள் நிச்சயமாக மாணவர்களின்  எதிர்காலத்திற்கு உதவும். என்றார்.

இந்த படிப்புக்கு உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உள்ளது  என்பது குறிப்பிடதக்கது.