இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தானிஷ் அஹமது தொழில்நுட்பக் கல்லூரி

கோவை க.க.சாவடியில் உள்ள தானிஷ் அஹமது தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.04.2021 ) பிச்சனூர், ரத்தினபுரி, க.க.சாவடி, மதுக்கரை, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பில், கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் ,ஆய்வக  உதவியாளர்களை கொண்டு கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குநர் அக்பர் பாஷா, முதன்மை நிர்வாக செயல் அதிகாரி தமீஸ் அஹமது ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கல்லூரி முதல்வர் பார்த்திபன், துறைத்தலைவர்கள்  ஆகியோர் முகாமினை துவக்கி பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை காலை முதல் மதியம் வரை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பேராசிரியர் விக்னேஷ், மக்கள் தொடர்பு அதிகாரி பதுல் முகமது உட்பட, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.