கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தின் விலையை உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “கோவிஷீல்டு ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு ரூபாய் 400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூபாய் 600 என விற்கப்படும். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ரூபாய் 250- க்கு கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகளின் விலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு குறைத்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்தின் விலை உயர்வு மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.