சகோதரி நிவேதிதை 150 ரத யாத்திரை துவக்க விழா

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், சகோதரி நிவேதிதையின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத யாத்திரை தொடக்க விழா இன்று (22.01.18) நடைபெற்றது. இவ்விழாவை, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக், நிகழ்ச்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன், கொந்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் சி.ஏ.வாசுகி, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைவர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமம் தலைவர் யதீச்வரி ராமகிருஷ்ணா ப்ரியாம்பா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். சிறப்பு பேச்சாளராக நடிகர் விவேக் கலந்து கொண்டார். மேலும், இந்நிகழ்ச்சியில், “பெண்ணே நீ மகத்தானவள்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. விழாவில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சகோதரி நிவேதிதையின் திரு உருவ சிலைக்கு மரியாதை செய்யபட்டு, ரத யாத்திரை தொடங்கப்பட்டது.