கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாம் முறை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அதில் நெகடிவ் என வந்த நிலையில், தொடர்ந்து இரு தினங்களாக காய்ச்சல் இருந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இரண்டாவது முறையாக பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக எடியூரப்பாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு, பின்னர் அதிலிருந்து குணமடைந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் இரண்டாவது முறையாக தொற்று ஏற்பட்டுள்ளது.