கொரோனா வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்

கோவையில், ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் கொரோனா வார்டு பெட்டிகளாக மாற்றக்கூடிய ஏற்பாடு விரைவில் நடக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் இன்று (15.4.2021)அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட கொரோனா தொற்றுப் பரவல் மிக மோசமாக உள்ளது. தற்போது கரோனா பாதிப்பின் இரண்டாவது அலை எல்லைத் தாண்டி, கைமீறிவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் கொடிசியா வளாகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் படுக்கை வசதிக ளை மாவட்ட நிர்வாகம் அதிகமாக  ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் இது போதாது பட்சத்தில் ரயில் பெட்டிகள் கொரோனா வார்டு பெட்டிகளாக மாற்றக்கூடிய ஏற்பாடு விரைவில் நடக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கட்டாயம் முக கவசம்,பொது இடங்களில் எச்சில் துப்புவது தவிர்த்தல், 2 மீட்டர் இடைவெளி  போன்றவற்றை அவசியம் கடைபிடிக்க மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  கடைப்பிடிக்க தவறியவர்களுக்கு 200 மற்றும் 500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.