கோவையில் பெண் குட்டியானை உயிரிழப்பு

கோவை, போலுவாம்பட்டி அருகே 3 வயது மதிக்கத்தக்க பெண் குட்டியானை உயிரிழந்தது.

கோவை வனச்சரகம் போலுவம்பட்டி வனப்பகுதிக்குள் சிறுவன மகசூல் சேகரித்துக் கொண்டிருந்த அட்டுக்கல் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் ஒரு பெண் யானையின் உடலை நேற்று பார்த்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழுவுடன் அங்கு செனறனர். அப்போது இறந்து கிடந்தது 3 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, யானையின் உடலை கால்நடை மருத்துவர்கள் பிரத பரிசோதனை செய்தனர். அப்போது உயரத்தில் இருந்து விழுந்ததில் மூன்று நாட்களுக்கு முன்பு யானை உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்தது.