ஓஷோவை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்புரை

கோவை ப்ரூக்பாண்ட் சாலையில் அமைந்துள்ள  கிக்கானிக் பள்ளியில் இன்று (12.3.2021) ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஓஷோ – வை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் உரையாற்றினார்.

மார்ச் 12, 13, 14 என 3 நாட்கள் இந்நிகழ்சசி நடைபெற உள்ளது. இன்று முதல் நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா, இயகோக சுப்ரமணியம், கோயம்புத்தூர் பங்கு வர்த்தக மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டி.பாலசுந்தரம், மற்றும் டைனமிக் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஜெயமோகன் ஓஷோவை பற்றிய செய்திகளையும் கருத்துக்களையும் மக்களிடம் பகிர்ந்துகொண்டார்.