சகோதரி நிவேதிதை 150வது ஆண்டு விழா மற்றும் ரத யாத்திரை

சகோதரி நிவேதிதை 150-ரத யாத்திரையை முன்னிட்டு  இன்று (6.1.2018)   கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் வலைதளம் மற்றும் செயலி வெளியிடப்பட்டது. வலைதளத்தை கே.எம்.சி.எச் துணைத்தலைவர் Dr.தவமணி D பழனிசாமி வெளியிட்டார்.

எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.மணிமேகலை மோகன், செயலியை வெளியிட்டார். இவ்விழாவில், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் சி.ஏ.வாசுகி, ஆகியோர் கலந்துக்கொண்டனர்.