விசில் போடு: மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

 

அடுத்த வருடம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசுர பலத்துடன் மீண்டும் களமிறங்கும் என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை விளம்பர கிளப் நடத்திய விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பிசிசிஐ தலைவர், என்.சீனிவாசன், இதனை தெரிவித்தார்.

2013 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்த கடும் ஊழல் புகார்கள் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிகப்பட்டுள்ளது. இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,  2018-ல் மீண்டும் மஞ்சள் சீருடையுடன் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என்றும், கடந்த காலத்தைப் போல இந்த அணி நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.