தைப்பூச திருநாளை முன்னிட்டு மகா அன்னதானம்

கோவை: முருகப்பெருமானுக்கு உகந்த திருநாளான தைப்பூச விழா தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் பல்வேறு இடங்களில் அன்னதான விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள செங்கப்பகோனார் திருமண மண்டபத்தில் தைப்பூச திருவிழா மற்றும் அன்னதான விழா நடைபெற்றது. மாச்சம்பாளையம் அருள்மிக மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலின் பரம்பரை அறங்காவலர் மருதாசலம் தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதணை செய்து பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெற்றது. மூன்று தலைமுறைகளாக சுமார் நூறு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று மகா அன்னதானத்தில் சுந்தராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.