கலசா பைன் ஜூவல்ஸ் நிறுவனம் சார்பில் நகை கண்காட்சி

கோவையில் கலசா பைன் ஜூவல்ஸ் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற நகை வடிவமைப்பாளர் அபர்ணா சுங்கு வடிவமைத்த தனித்துவமிக்க நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, கோவை ரெஸிடென்ஸி டவர் ஓட்டலில் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.

அபர்ணா சுங்குவின் மேற்பார்வையில் தேர்வான தனித்துவமிக்க கைவினை தங்க நகை கண்காட்சி கலசா நுண் நகை காட்சி நடக்கிறது. இந்தியாவின் மாபெரும் நகை சேகரிப்பாக இந்த கண்காட்சி இடம் பெறுகிறது. இதில் சம்பா பப்ளிஷிங் கம்பெனி அன்ட் பார்ம், இயக்குனர், தேவி கற்பகம் மாருதி, மோகன் பிரீடிங் பார்ம், கலை செல்வி மோகன், சமூக ஆர்வலர் மற்றும் மாடல், கவிதா ரமேஷ், எம்.டி.ஏ மில்ஸ் பிரைவேட் லிமிடெட், இயக்குனர், ஷியாமளி ஜாய், ஷிவானி டால்மியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்கள்.

இது குறித்து பிரபல நகை வடிவமைப்பாளர் அபர்ணா சுங்கு கூறியதாவது :- கலசா பைன் ஜூவல்ஸ், பழங்காலத்து நகை வடிவமைப்புகளை, பழமையான சிலைகள்,  கலை நயமிக்க ஓவியங்களிலிருந்து சேகரித்து, அவற்றை கைவினைப்படுத்தி கோவையில் ஜனவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் காட்சிப்படுத்துகிறது. இதில், அனைத்து வகையான பிரமிக்க வைக்கும் தங்கம், பாரம்பரியமிக்க நகைகள், சிறப்புத்தன்மை வாய்ந்த அரசு பரம்பரை நகை வகைகள், அரிய வகை நகை வடிவமைப்புகள் இடம் பெறுகின்றன. கலை நயமிக்க வேலைபாடுகளையுடைய, விருது பெற்ற வடிவமைப்புகளுடன் நாட்டின் சிறப்பான நகை கண்காட்சியை கலசா நடத்துகிறது.

கலசா, கோவில் மற்றும் பாரம்பரிய ஜூவல்லரி கலக்சன்களுக்கு பெயர் பெற்றது. மிகச்சிறந்த கோவில் நகைகள் என்ற இந்திய நகைகளுக்கான விருது மற்றும் பாரம்பரிய மணப்பெண் நகைகள் என்ற டைம்ஸ் ரீடெய்ல் விருதுகளை பெற்றுள்ளது. இந்தியாவின் மாபெரும் ஜூவல்லரி சேகரிப்பு என்ற புதிய கருத்துடன் நடத்தும் இந்த கண்காட்சியில், பல புதுமையான நகைகள் கோவை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்திய வடிவமைப்பு கலையின் ஆணி வேராக திகழும் புதுமை வடிவமைப்பு நகைகள், ஜாடு நகைகள் இடம் பெறுகின்றன, என்றார்.