ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 28). இவர் ஆன்லைனில் ரம்மி விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இவர் கடன் வாங்கி பணத்தை ரம்மி விளையாட்டில் கட்டி இழந்ததால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார் மூவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைனில் இதுபோன்ற சூதாட்டங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இளைஞர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் இதுபோன்ற விளையாட்டுகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.