விடுதலை வீராங்கனை பிகாஜி ருஸ்தம் காமா பிறந்த தினம்

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும், பெண் சுதந்திரம் மற்றும் வாக்குரிமைக்காக குரல் கொடுத்தவருமான பிகாஜி ருஸ்தம் காமா 1861 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

1907ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஸ்டட்கார்ட் என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் மாநாட்டில் ‘இந்திய சுதந்திரக் கொடி” வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.

இவர் இந்த மாநாட்டில் இந்தியாவில் மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் பிரிட்டிஷிடமிருந்து சுயாட்சி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தார். பெண்ணுரிமை, பெண்களுக்கு வாக்குரிமை ஆகியவற்றுக்காகப் போராடினார். தனது சொத்துக்களில் பெரும் பகுதியை சிறுமிகளுக்கான ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு எழுதி வைத்தார்.

இந்தியாவில் பல நகரங்கள், தெருக்கள், பொது அமைப்புகளுக்கு பிகாஜி காமா அல்லது மேடம் காமா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுவதும் இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பிகாஜி காமா 1936 ஆம் ஆண்டு மறைந்தார்.