அறிவியல் அறிஞர் மைக்கேல் ஃபாரடே பிறந்த தினம்

‘மின்சாரத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடே 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

காந்தவியல்-மின்சாரவியல் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகள் மூலம் நிரூபித்த மேதை மைக்கேல் ஃபாரடே. இவர் மின்காந்த தூண்டலைக் கண்டுபிடித்தவர். கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தார்.

உலகிலேயே அதிகபட்ச பரிசோதனைகள் செய்து பார்த்த அறிவியல் அறிஞர் என்று போற்றப்படும் இவர் 1867ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி மறைந்தார்.