மனிதவள மேலாண்மைத் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (18.09.2020) தமிழக அரசின் கருவூலத்துறையில் முழுகணினி மயகமாக்கல் நடவடிக்கையின் திட்டமான ஓருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன்,  மாவட்ட கருவூல அலுவலர் ராஜா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்(கணக்கு) சுஜாதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துராமலிங்கம் மற்றும்  அனைத்து துறை உயர் அலுவலர்கள்,  விப்ரோ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.