ஊடகத்தமிழ் வானொலி பயிலரங்கு

கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மொழித்துறை சார்பாக ஊடகத்தமிழ் வானொலி என்ற பொருண்மையில் பயிலரங்கு நடைபெற்றது.

நிர்வாகத் தலைவர்கள் கண்ணையன், சரஸ்வதி கண்ணையன் ஆகியோரின் தலைமையில் செயலர் பிரியாவின் முன்னிலையில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி வழிகாட்டுதலில் துறைத்தலைவர் ரமேஷ்குமார் துவக்கி வைத்தார்.

கோடைப்பண்பலை 100.5 வானொலி அறிவிப்பாளர் பகத்கான் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வானொலி நிகழ்வுகளைப் பயிற்றுவித்ததோடு பணிவாயப்புகளையும் பகிர்ந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

நிகழ்வு ஒருங்கிணைப்புப் பணிகளை மொழித்துறைப் பேராசிரியர்கள் அன்புச்செல்வி, ஜெயப்பிரகாசம், கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.