குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில்  Dr N மகாலிங்கம் 28th தேசிய செஸ் போட்டி 2017

குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில்  Dr N மகாலிங்கம் 28th தேசிய செஸ் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) 2017 அக்டோபர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 20ஆண்டுகளுக்குப் பிறகு கோவை நகரில் தேசிய செஸ் போட்டி நடைபெறுகிறது. 21 மாநிலங்களில் இருந்து 170 போட்டியாளர்கள் இந்த 9 நாள் போட்டியில் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட செஸ் வீரர்கள் 2018 ஆம் ஆண்டில் உலக செஸ் சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த்  விளையாட்டுகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளனர்.

திரு ரவி கந்தசாமி, துணைத் தலைவர் Dr N M. செஸ் அகாடமி, வரவேற்புரை ஆற்றினார். ஸ்ரீ சங்கர் வானவராயர், இணை தாளாளர், KCT தமது சிறப்புரையில், செஸ் அதிகாரிகள், செஸ் வீரர்கள் மற்றும் அவர்களின் மேலாளர்கள் ஆகியோரை வரவேற்றார். Dr N மகாலிங்கம் அவர்களின் பங்களிப்பு மற்றும் செஸ் போட்டியின் மீதான ஆர்வத்தை பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் அவர் செஸ் போட்டி மனதை கூர்மையானதாகவும், வலிமை மிக்கதாகவும் மாற்றும் என்று கூறினார்.

சிறப்பு விருந்தினர் திரு பாரத் சிங் சௌஹான், செயலாளர், அனைத்து இந்தியா செஸ் பெடரேஷன், செஸ் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதையும், தற்போது இந்தியாவில் 50 கிராண்ட் மாஸ்டர்ஸ் உள்ளனர் எனவும் கூறினார். அவர் Dr N  மகாலிங்கம் அவர்களின் செஸ் போட்டிக்கான அர்ப்பணிப்பை பற்றியும் பங்களிப்பை பற்றியும் கூறினார். திரு அனந்தராமன், தலைவர், Arbiter’s Commission, AICF, Dr N  மகாலிங்கம் அவர்கள் இன்று தமிழ் நாட்டில் பல முன்னணி செஸ் போட்டியாளர்களை உருவாக்கி தந்தமைக்கு நன்றி கூறினார். மேலும் சக்தி குழுமம் சென்னை ஓபன் செஸ் போட்டிக்கு வருடா வருடம் பரிசு தொகையை வழங்கி வருவதற்கு தமது நன்றியை தெரிவித்தார். ஸ்ரீ M பாலசுப்பிரமணியம், தாளாளர், KCT திரு பரத் சிங் சௌஹான் மற்றும் திரு அனந்தராமன் அவர்களை கௌரவப்படுத்தி நினைவு பரிசு வழங்கினார்.

ஸ்ரீ சங்கர் வானவராயர், இணை தாளாளர், KCT திரு ஸ்டீபன் பாலசாமி அவர்களை கௌரவப்படுத்தி நினைவு பரிசு வழங்கினார்.

ஸ்ரீ  M  பாலசுப்பிரமணியம், தாளாளர், KCT மற்றும் திரு பரத் சிங் சௌஹான், செயலாளர், அனைத்து இந்தியா செஸ் பெடரேஷன், செஸ் போட்டியை துவங்கிவைத்தார்கள்.

திரு.விஜயராகவன், இணை செயலாளர், தமிழ்நாடு செஸ் அசோசியேஷன், நன்றியுரை வழங்கினார்.