அரிமா சங்கத்தின் சார்பில் ஸ்ரீ அஷ்ட கால பைரவர் திருக்கோவிலுக்கு இலவச இரும்புக்கூரை

கோகுலாஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவை ராமானுஜ நகர் பங்காரு லே-அவுட்டில் உள்ள ஸ்ரீ அஷ்ட கால பைரவர் திருக்கோவிலில் மாவட்ட அரிமா சங்கம் 324 B1 சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் கோவிலின் முன்பகுதியில் ஸ்டீல் கூரை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அரிமா சங்கத்தின் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் ராம்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் ஸ்ரீ அஷ்ட கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச முகக்கவசமும் சிறப்பு பூஜை அன்னதானமும் வழங்கப்பட்டது.

மண்டலத் தலைவர் அரிமா செல்வராஜ் மற்றும் வட்டாரத் தலைவர் அரிமா மார்க்கிரேட்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உணவு திட்டம் தலைவர் ஜெயசேகரன், நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளர் அரிமா செந்தில்குமார், நேரு நகர் அரிமா சங்க உறுப்பினரும் நியோமேக்ஸ் குழுமம் மேலாளர் பாலசுப்ரமணியம் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.