அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணை

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள வேளாண் தேவைகளுக்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

குடிநீர் மற்றும் பாசனப் பகுதியில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, தண்ணீர் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளதை அடுத்து அமராவதி அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக கரூர் நகரம் வரை குடிநீர் தேவை மற்றும் 18 பழைய வாய்க்கால்களுக்கு உட்பட்ட ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள பயிர்களுக்கு 06.08.2020 முதல் 16.08.2020 வரை 11 நாட்களுக்கு 1210 மி.க.அடி தண்ணீர் மற்றும் அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் குடிநீர் மற்றும் நிலையில் உள்ள பயிர்களுக்கு,  06.08.2020 முதல் 20.08.2020 வரை 15 நாட்களுக்கு, 570 மி.க.அடி தண்ணீர் என மொத்தம் 1780 மி.க.அடி தண்ணீரை திறந்து விட ஆணையிட்டுள்ளார்.

மேலும் இதனை பொதுமக்கள் மற்றும் வேளாண் பெருமக்கள் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.