விதியை மாற்றி எழுத முடியுமா?

விதியை மதியால் வெல்ல முடியும் என்ற பல சினிமா வசனங்கள், நம்பிக்கை வாசகங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இது சாத்தியம் தானா?இதற்கு சத்குருவின் விளக்கம் என்ன? கேட்டறிவோம்…

சத்குரு:

நீங்கள்விதியை விழிப்புணர்வு இல்லாமல் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இதை விழிப்புணர்வுடனும் உருவாக்க இயலும். உங்கள் விதியைமாற்றி எழுதவும் முடியும். இதைத்தான் ஆன்மீக செயல்முறையில் நாம் செய்து கொண்டு வருகிறோம்.உங்களுடையஅடிப்படையானநிலையைத் தொட முடியுமானால், ஒரு கணம், படைப்பின் மூலத்தை உங்களுக்குள் உணர முடியுமானால், உங்களுடைய முழு கவனம் உங்களை நோக்கி நகருமேயானால், நீங்களே உங்கள்விதியைமாற்றிஎழுத முடியும்.

நீங்கள் “நான்”என்றுஉங்கள் வீடு, உங்கள்மனைவி, உங்கள் கார், உங்கள்பதவி, மற்றும் உங்கள்அடையாளங்களைக் கருதுவதால், உங்கள்கவனம் எல்லா நேரமும் சிதறி இருக்கிறது. இவை அனைத்திலிருந்தும், நீங்கள் சேகரித்தஉங்கள்உடல் மற்றும் மனதையும் துண்டாக்கினால், ஒருவரைப் போலவும் உணர மாட்டீர்கள்.இல்லையா?எனவே, “நான்”என்பதேஉங்களைச் சுற்றி விரிந்து இருக்கிறது. கூட்டத்தின் விதி, முன்பே எழுதப்பட்ட விதி.

நீங்கள் உண்மையைஉணர்ந்த மனிதரானால், உங்கள் விதி உங்கள் கையில். ஆங்கிலத்தில், individual என்ற வார்த்தை indivisible லிருந்து வந்தது. அது, பிரிக்க முடியாத, இங்கும் அங்குமாக இருக்க முடியாதது. ஆன்மீக செயல்முறையில் ஆன்மீக வளர்ச்சிக்காகஅவசரப்படுபவர்கள் ஏன் கல்யாணம், குழந்தை, உறவு முறையில் ஈடுபடுவதில்லையென்றால், கணவன், மனைவிஎன்றாகிவிட்டால், உங்களால், ஒன்றும் செய்ய முடியாது.

“நான்” என்பது மற்றஒன்றுடன் அடையாளம் கொள்கிறது.இல்லையெனில், அவர்கள்உங்களை வாழவிட மாட்டார்கள், அப்படித்தானே?நீங்கள்அல்லாதஒன்றுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும்போது, உங்கள்அனுபவத்தில், எதைநீங்கள் சேகரித்தீர்களோ அதுதான் நீங்கள்என்றால், நீங்கள்சிதறிப்போவீர்கள். சந்நியாசம் மற்றும் பிரம்மச்சரியத்தின் முக்கியத்துவம் இதுதான்.உங்களுடைய முழு கவனம், உள்நோக்கி நகருதல்.நான் “நீங்கள்” என்று சொன்னால், “நீங்கள்” மட்டும்தான், உங்கள்உடல், மனம் கூடகிடையாது.

அப்படி முடியவில்லை என்றால், ஒன்றுடன் மட்டும் அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். “நீங்கள்” என்று சொன்னால், “நீங்களும் உங்கள் குருவும்” என்றாக்கிக் கொள்ளுங்கள். எந்த ஒரு தயக்கமுமின்றி குருவுடன் பற்றுதலோடு இருங்கள், ஏனென்றால், நீங்கள்எப்படி வேண்டுமென்றாலும் சிக்கிக்கொள்ளலாம், அவர் சிக்கிக்கொள்ளப் போவதில்லை. கனிந்தபோது கைவிட முடியும்.மற்ற உறவுகளுடன் இது ஒருபோதும் சாத்தியம் இல்லை. நீங்கள்சிக்கிக்கொண்டால், விடுதலை வேண்டும்போது உங்களை விடுவிக்கமற்றவர்கள்விட மாட்டார்கள். மதியால் விதியைமாற்றிஎழுத முடியும். அந்த விழிப்புணர்வு வரவில்லை என்றால், உங்களை முழுமையாகஉங்கள் குருவிடம் அர்ப்பணித்தால், மிகஎளிதாகமாற்றிஎழுத முடியும்.

வளர, கரைய, உணரஏங்குங்கள்.என்னநடக்க வேண்டுமோ, நடக்கும்.நீங்கள் உண்மையைஉணர்ந்த மனிதனானால், உங்கள் விதி உங்கள் கையில். விழிப்புணர்வுடன் உங்கள் விதி நடந்தால், அடுத்தநிலைதானாகநடக்கும், ஏனென்றால், உங்களுக்குள் இருக்கும் புத்திசாலித்தனம், எல்லையில்லாததைத் தேர்ந்தெடுக்கும், கட்டுப்பாட்டை அல்ல.