அம்மா பார்க், உடற்பயிற்சி கூடம் திறப்பு

கோவை மாவட்டம், மத்வராயபுரம் ஊராட்சியில், ஏஞ்சல் கார்டன் பகுதியில் அமைக்கப்பட்ட அம்மா பார்க், அம்மா உடற்பயிற்சி கூடத்தினை இன்று (30.06.2020) நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கி.ரமேஷ்குமார், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பிரதீப், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவராகநாத்சிங் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.