பார்க் கல்வி குழுமங்களின் பட்டமளிப்பு விழா

கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில்  பார்க் கல்வி குழுமங்களின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சுமார் 1000 பொறியியல் மற்றும் மேலாண்மை பட்டதாரி மாணவர்கள் தங்கள்  சான்றிதழ்களை இவ்விழாவில் பெற்றுக்கொண்டனர்.

பார்க்கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர்.பி.வி.ரவி தலைமை வகித்தார். பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அலுவலர் டாக்டர்.அனுஷா 3 தங்கப்பதக்கங்கள் மற்றும் 12 ரேங்க் பெற்ற பட்டதாரிககள் உள்பட அனைத்து  பட்டதாரிகளையும் வாழ்த்திப்பேசினார். கடந்த 16 வருடங்களாக ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவின் போதும் தங்கப்பதக்கம் பெற்ற பட்டதாரிகளுக்கு  நான்கு ஆண்டு கல்வி கட்டண தொகையை திருப்பி கொடுக்கப்பட்டது. தங்கப்பதக்கங்கள் பெற்ற மாணவர்களின் பட்டியல்

  1. R. அருணா, Master of Engineering (Aeronautical Engineering)
  2. G யோகேஸ்வரன் – Bachelor of Engineering (Mehatronics)
  3. 3. VAN தையல்நாயகி- Bachelor of Engineering (Environmental Engineering)

சிறப்பு விருந்தினர் V. ஈஸ்வரன் Outstanding Scientist, Vikram Sarabai Space Centre, Tumba, Trivandrum & Project Head S200

பட்டமளிப்பு விழா பேசியதாவது: தங்களுக்கு ஆர்வம் உள்ள துறையை தேர்ந்தெடுத்து அதில் முழு ஈடுபாடு கொண்டு அர்ப்பண உழைப்புடன் ஈடுபட்டால் வெற்றி பெறுவது உறுதி என்றார். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் பொறியியாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் காத்துகொண்டு இருப்பதாக கூறினார். கடைசியாக பொறியாளர்கள் தங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொண்டு வாழவேண்டும் என்று கூறினார்.