ஜோதிகா விவகாரத்தில் சூர்யா விளக்கம்

கொரோனா ஊரடங்குக்கு முன்பாக தனியார் நிறுவனம் நடத்திய விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா பங்கேற்று இருந்தார் அதில் அவர் பேசுகையில், ‘எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள் வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம்’ என்று தெரிவித்திருந்தார்.

அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜோதிகாவின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது. இந்த விவகாரம் குறித்து சூர்யா, ஜோதிகாவோ எதும் கருத்து தெரிவிக்காமல் இருந்துவந்தனர். இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடங்கங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.

கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரியவாய்ப்பில்லை.