பையன் அப்பாவிடம் சொன்னான்
‘அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம்.. நீ ஸ்கூலுக்கு வரணும்’
‘எதுக்குடா என்னை வரச் சொல்றாங்க ?”
“கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க.. 9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு 63 ன்னு சொன்னேன்..’
“சரி அப்புறம்…”
“7 அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க..”
“அதே எழவு தானே வரும்… சரி நீ என்ன சொன்ன..”
“அதே எழவு தானே வரும்னு சொன்னேன்.. உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க…”
“சரி, சரி நாளைக்கு வரேன்”
அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்,
“அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா?”
” இல்லடா நாளைக்கு வரேன்”
“சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு”
“எதுக்குடா?”
“ட்ரில் இருந்தது.. முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன்.. அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்.. ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்.. அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு…
“ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும் லூசா அவன்.. சரி நீ என்ன பண்ணுன..”
“ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும் லூசு-ன்னு சொன்னேன்.. உங்கப்பாவைக் கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு..”
“சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன்”
அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்,
“இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா”
“இல்லடா நாளைக்கு வரேன்”
“நீ போக வேணாம் பா”
” ஏண்டா?”
“என்னை ஸ்கூலேர்ந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க”
“என்னாச்சுடா?”
“ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார்.. அங்க கணக்கு டீச்சர், பி.டி. டீச்சர், சயின்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க”
“சயின்ஸ் டீச்சரா ..!! அந்த நாய் ஏன்டா அங்க இருந்தான்?”
“அதேதான்பா நானும் கேட்டேன். டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க”
நீதி: குழந்தைகள் கெட்ட வார்தைகள் பேசுவதில்லை. கேட்ட வார்தைகளையே பேசுகிறார்கள்.
பள்ளிக்கு அனுப்பினால் மட்டுமே கடமை முடிந்தது என்று தன் வேலையைப் பார்க்கும் பெற்றோர்களும் பிள்ளைகளிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாமல் பொறுப்பற்று நடந்துகொள்ளும் பெற்றோர்களின் குழந்தைகள் இப்படித்தான் வளரும். பிள்ளைகளுக்கு பெற்றோர்தான் முதல் ஆசிரியர்கள் என்பதை அனைவரும் இந்த சூழலில் நன்றாக உணர்ந்து நடந்து கொள்வது அவசியம். அப்படி நடந்து கொண்டால் பிள்ளைகளால் பெற்றோர் அவமானப்பட வேண்டிய அவசியம் வராது.