அரசியல் பிரவேசம் எப்போதோ துவங்கி விட்டது – நடிகர் கமல்ஹாசன்

கோவை, திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன் “என்னை பார்த்து இந்த சமூகத்தில் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் எனக்கு கோபம் வரும். நாம் நமது வேலையை செய்வோம், தேவை வரும் போது கோட்டை நோக்கி புறப்படுவோம். ஆனால் இந்த அரசியலைக் இப்படியே விட்டு வைக்க கூடாது.

தலைமை ஏற்க தைரியம் வந்துவிட்டதா என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். நான் கேட்கிறேன் உங்களுக்கு தலைமை ஏற்க தைரியம் வந்துவிட்டதா?. அரசியல் சூழலைக் இப்படியே விட்டு வைக்காமல் அதை மாற்ற வேண்டியது நமது கடமை. தமிழகத்தைக் சுத்தமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுவோம்”, என தெரிவித்தார்.