32 வயதில் முதல் பிறந்த நாள்

கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில், 32 வயது நபருக்கு முதலாமாண்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி சந்திரகுமார் என்பவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. சிகிச்சை நிறைவடைந்து ஒரு வருடம் முடிந்து, தற்பொழுது சந்திரகுமார் ஆரோக்கியமாக உள்ளார் என்று குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் இதய மாற்று அறுவை சிகிச்சை இயக்குனர்டாக்டர் சந்திரசேகர் தெரிவித்தார்.

அதனை கொண்டாடும் விதமாக இன்று (30.08.17) சந்திரகுமாருக்கு 32 வயதில் முதல் பிறந்தநாள் மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சந்திரகுமாரின் பெற்றோர், மருத்துவக்குழு, மூத்த நிர்வாக அதிகாரி ஸ்ரீ எஸ் பதி, டாக்டர் சந்திரசேகர், டாக்டர் ரகுபதி வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.