நூல் வெளியீட்டு விழா

சிந்தனைக் கவிஞர் கவிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், கவிஞர் கவிதாசன் எழுதிய “வெற்றிப் பூக்கள்” புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் வே.பாலசுப்பிரமணியம் புத்தகத்தினை வெளியிட டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஸ்டீல்ஸ், ஜே.எஸ்.டபிள்யு, மனிதவள மேம்பாட்டுத் துறை மேனாள் பொது மேலாளர் ப.சண்முகசுந்தரம் பெற்றுக் கொண்டார்.  கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முருகேசன், தேவஸ் அகாடமி நிறுவனர் தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.