கே.பி. ராமசாமிக்கு கேபிஆர் மில்லில் பாராட்டு விழா

கேபிஆர் குழுமங்களின் தலைவர் கே.பி ராமசாமிக்கு அண்மையில் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

இதற்காக பாராட்டு தெரிவிக்கும் விதமாக கேபிஆர் குழும அலுவலர்கள் இணைந்து பாராட்டு விழா நடத்தினர். இதில் சிறப்பு விருந்தினர்களாக கே. ஜி. குழுமத் தலைவர் டாக்டர் பக்தவத்சலம், உடுமலைப்பேட்டை ஆர்.கே.ஆர் கல்வி குழுமத் தலைவர் ஆர்.கே. ராமசாமி, ரூட்ஸ் நிறுவங்களின் இயக்குனர் கவிதாசன், சென்னை இன்போசிஸ் மனிதவளத்துறை துணைத் தலைவர் சுஜித்குமார் ஆகியோர் முதன்மை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கேபிஆர் குழுமங்களின் தலைவர் கே.பி ராமசாமி பேசுகையில், இந்த பட்டம் பெற காரணம் கேபிஆர் குழும உழியர்களும், நிர்வாகிகளும் தான். அதனால் இதனை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.