வெள்ளலூர் புதிய பேருந்து நிலைய பணி துவக்கம்

கோவை மாநகராட்சி பொது நிதியிலிருந்து 168 கோடியில் வெள்ளலூரில் 61.62 ஏக்கரில், புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்தார். இவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.