மாவட்ட ஆட்சியாளர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றுவருகிறது. இந்த தேர்தல் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியாளர் ராசாமணி நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வு செய்த பின்னர் இவர் பேசுகையில், மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்குப்பதிவு தேர்தல் விதிகளை மீறுவோர் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.