ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் திருக்குறள் போட்டி

ஸ்ரீராம் சிட்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகிய, ஸ்ரீராம் இலக்கியக் கழகம், இன்று (12.8.17) கோவையில் உள்ள சபர்பன் மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவியரிடையே நடத்தியது. இதில் ஸ்ரீ ராம் சிட்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் கே.சக்திவேல் வரவேற்ப்புரையாற்றினார். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் இ.குருமூர்த்தி முன்னிலை வகித்தார். சி.ஐ.இ.டி.கல்லூரியின் பேராசிரியர் முனைவர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார். காட்டூர் காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறை ஆய்வாளர் தா.ஹா.கணேஷ் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் மேலாளர்.லி.ஆனந்த் குமார் நன்றியுரை நல்கினார்.