கோயம்புத்தூர் விழா கொண்டாட்டம்

கோயம்புத்தூர் விழா கொண்டாட்டம் தனித்துவமிக்க ஒரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களையும் குடிமக்களையும் ஒன்றாக இணைத்து, நகரின் சாதனைகளை கொண்டாடும் விழாவாக உள்ளது. தற்போது 12வது பதிப்பாக, வரும் 2020 ஜனவரி 2 முதல் 12 வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த விழாவை இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த முன்வந்துள்ளன.

கோயம்புத்தூர் விழா ஜனவரி மூன்றாம் தேதி இசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது, அதனை அடுத்து மாரத்தான், கோயம்புத்தூர் விழா அணிவகுப்பு, கோவையின் அறுசுவை, கலைத்தெரு, தி பிட்ச்( கோயம்புத்தூர் ஸ்டார்ட் – அப் பண்ட் விழா) மற்றும் கார் மற்றும் பைக் கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.