ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் 33 வது பட்டமளிப்பு விழா எஸ்என்ஆர் கலைஅரங்கத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்தின் தலைவர் டாக்டர். ராய். கே. ஜார்ஜ் கலந்துகொண்டார். எஸ்என்ஆர் அறக்கட்டளையின் அறங்காவலர் டி. லட்சுமிநாராணயணசுவாமி, கல்லூரி முதல்வர் டாக்டர். நிர்மலா, துணைமுதல்வர் பேராசிரியர் கிரிஜா குமாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் மொத்தமாக 2 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 94 இளங்களை பட்டதாரிகளும் சான்றிதழ் பெற்றனர். பலதுறைகளில் சிறந்து விளங்கிய 8 மாணவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் சிறந்த மாணவனாக இளங்களை பட்டப்படிப்பில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவன் முருகபெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப்பதக்கம் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரியின் பேராசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.