நீர் மேலாண்மை நுட்பங்களை தெரிவித்த ஜெர்மன் நிபுணர்

பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளையின் வாராந்திர மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, இந்தவாரம் முதன்மை விருந்தினராக மழை நீர் சேகரிப்பு நிபுணரான WISY AG- ஜெர்மனியின் இயக்குநர் (ஆர் & டி) ரெய்ன் ஃபிரிட்ஸ் கலந்து கொண்டார். இதில் இவர் தண்ணீரை சேமிக்கவும், பயன்படுத்தவும் கூடிய சிறந்த நடைமுறைகளை வனம் இந்தியா அறக்கட்டளையுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் வனம் இந்தியா அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.