கல்லூரி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

பொள்ளாச்சி, மகாலிங்கம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் பாரதியார் பல்கலைக்கழக உறுப்பு  கலை மற்றும்  அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஆகியோர் அடிக்கல் நட்டு துவங்கி வைத்தனர்.

பாரதியார் பல்கலைக்கழக உறுப்பு  கலை மற்றும்  அறிவியல் கல்லூரிக்கு ரூ.8கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும்பணி மற்றும் 212 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.72.75கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

இம்முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, சட்டமன்ற உறுப்பினர் (சூலூர்) கந்தசாமி, பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிச்சாமி, வருவாய் கோட்டாட்சியர் (பொள்ளாச்சி) ரவிக்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) செல்வராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரபாகரன், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, வட்டாட்சியர் (பொள்ளாச்சி) தணிக்கைவேல் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனார்.